தூத்துக்குடி

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் காயம்

DIN

கோவில்பட்டியில் திங்கள்கிழமை ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் காயமடைந்தார். 
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் 2 ஆவது நடைமேடையில் பாலக்காடு-திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில்  பகல் 12.50 மணியளவில் வந்தடைந்தது. 
இந்த ரயிலில் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்குப் பயணம் செய்த  சின்னம்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்த சிவமுருகன் மனைவி முத்துச்செல்வி (25) என்பவர், தனது குழந்தை காலில் அணிந்திருந்த கொலுசு தவறிவிட்டதை எடுப்பதற்காக ரயிலில் இருந்து இறங்கினாராம். 
அப்போது, ரயில் புறப்பட்டதால் முத்துச்செல்வி நடைமேடையில் தவறி விழுந்தார். இதில், காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT