கோவில்பட்டியில் திங்கள்கிழமை ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் காயமடைந்தார்.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் 2 ஆவது நடைமேடையில் பாலக்காடு-திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் பகல் 12.50 மணியளவில் வந்தடைந்தது.
இந்த ரயிலில் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்குப் பயணம் செய்த சின்னம்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்த சிவமுருகன் மனைவி முத்துச்செல்வி (25) என்பவர், தனது குழந்தை காலில் அணிந்திருந்த கொலுசு தவறிவிட்டதை எடுப்பதற்காக ரயிலில் இருந்து இறங்கினாராம்.
அப்போது, ரயில் புறப்பட்டதால் முத்துச்செல்வி நடைமேடையில் தவறி விழுந்தார். இதில், காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.