அதிமுக கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும்: புதுவை முன்னாள் முதல்வர் என். ரெங்கசாமி

அதிமுக கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என,  புதுச்சேரி முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்

அதிமுக கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என,  புதுச்சேரி முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான என். ரெங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: அதிமுக கூட்டணி வலுவானது. தமிழகம், புதுச்சேரியில் இக்கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாங்கள் கட்சி தொடங்கும்போது இந்தக் கோரிக்கையைத்தான் பிரதானமாக வைத்தோம். இப்போதும் அதே கோரிக்கையை வலியுறுத்துவோம் என்றார்.
முன்னதாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பேட்டியின்போது, புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலர் பாலன், கவிராயர் சேதுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com