தூத்துக்குடி

தேர்தல் விதிமுறை மீறல்: அதிமுக நிர்வாகி மீது வழக்கு

DIN

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அதிமுக நிர்வாகி மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.  
மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவைப் பொருளாளர் வேலுமணி கட்செவி அஞ்சலில் கட்சிகள் குறித்து அவதூறாகக் கருத்துப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் அளித்த தகவலின்பேரில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான தமிழ்ச்செல்வன் அதைப் பார்வையிட்டு, தேர்தல் பறக்கும் படையில் உள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் அதிமுக நிர்வாகி மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT