அரியலூர் மாவட்டம் த. வளவெட்டி குப்பத்திலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் உர விற்பனையாளர்களுக்கான பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் இணை இயக்குநர் (பொ) இளங்கோவன் தலைமை வகித்துப் பேசினார். உதவி இயக்குநர் ராஜேந்திரன் முன்னிலை வகித்து பேசினார். வேளாண் அலுவலர் சுப்பிரமணியன் உர விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.
பயிற்சியில், அனைத்து உர விற்பனையாளர்களும்,விவசாயிகளுக்கு அவர்களது மண் வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அளவில் மட்டுமே உரங்களை வழங்க வேண்டும்.
மேலும் மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பரிந்துரைத்து வழங்க வேண்டிய பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சி முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் நன்றி தெரிவித்தார்.