மதுவிற்ற 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் மது விற்ற 3 பேர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் மது விற்ற 3 பேர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
மீன்சுருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்த் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுவிற்றதாக தழுதாழை மேடு காலனித் தெருவைச் சேர்ந்த ராமானுஜம் (48), குருவாலப்பர் கோயில் உடையார் தெருவைச் சேர்ந்த திருவேங்கடம் (50) ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்தனர். இதேபோல் ஆண்டிமடம் பகுதியில் மதுவிற்றதாக காங்குழி காமராஜர் தெருவைச் சேர்ந்த சரவணன் (65) என்பவரை ஆண்டிடம் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com