அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக். பள்ளியில் 12 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான நெட்பால் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டியை சோழமாதேவி கிரீடு வேளாண் மைய முதுநிலை விஞ்ஞானி அழகு கண்ணன் தொடக்கி வைத்தார். போட்டிகளில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்டன. போட்டிகளில், ஜயங்கொண்டம் அன்னை தெரசா பள்ளி முதலிடத்தையும், பாத்திமா மெட்ரிக். பள்ளி 2 ஆம் இடத்தையும், உதயநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி 3 ஆம் இடத்தையும், சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 4 ஆம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றன.
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு அன்னை தெரசா பள்ளி தாளாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். மாநில நெட்பால் கழக செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் பரிசு கோப்பைகளை வழங்கிப் பாராட்டிப் பேசினார்.