குழந்தை விஞ்ஞானி விருதுபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

குழந்தை விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்களுக்கு ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக். பள்ளியில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

குழந்தை விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்களுக்கு ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக். பள்ளியில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு பள்ளி முதல்வர் தாரணி தலைமை வகித்தார். சிறப்புவிருந்தினராக புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் செங்குட்டுவன், அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி தாளாளர் முத்துக்குமரன், சூரிய மணல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பாராட்டினர்.  ஆசிரியர்கள் வைத்திலிங்கம் பெனாசீர் மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி ஆசிரியர் சதீஷ் குமார் வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு அறிவியல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தர்மராஜன் நன்றி கூறினார் . 
தேசிய அறிவியல் குழந்தைகள் 26 ஆவது மாநில மாநாடு கோயமுத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.இதில்,  ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக். பள்ளி, புதுச்சாவடி மற்றும் சூரிய மணல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று குழந்தை விஞ்ஞானி விருது பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com