பிளஸ்-2 பொதுத்தேர்வில்  தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும்

நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீத்தை உயர்த்த வேண்டும் என

நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீத்தை உயர்த்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி ஆலோசனை வழங்கினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்வித்துறை சார்பில் நிகழாண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முதுகலை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு, ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்து, நடைபெற உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள்  அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும். மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஒவ்வொரு ஆசிரியர், ஆசிரியைகளும் பாடுபட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com