அரியலூர்

அதிகளவில் சி.சி.டி.வி. கேமரா  பொருத்த எஸ்.பி. உத்தரவு

DIN

குற்றங்களைத் தடுக்க அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்று போலீஸாருக்கு அரியலூர் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
ஜயங்கொண்டம்,ஆண்டிமடம்,தா.பழூர்,மீன்சுருட்டி,செந்துறை ஆகிய பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களுக்கு சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், அங்குள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது போலீஸாரிடம் காவல் நிலையங்களை சுத்தமாக, சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார். 
மேலும் ஜயங்கொண்டம் நான்கு சாலைச் சந்திப்பு, கடைவீதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், போக்குவரத்தைச் சீர் செய்ய நடை மேடை அமைக்க வேண்டும், போக்குவரத்தின்போது வாகனங்களை நிறுத்திச் செல்ல வெள்ளை கோடுகளை புதிதாக பெயிண்டிங் செய்ய வேண்டும், குற்றங்களை குறைக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் அதிகப்படியான சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT