அரியலூரில் பொதுப் பணித் துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
அரியலூர் ராஜாஜி நகரில் வசிப்பவர் பன்னீர்செல்வம். சேலம் பொதுப்பணித்துறை அலுவலக அதிகாரி. இவரது மனைவி ஷோபனா (47) செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சென்ற நிலையில், புதன்கிழமை காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஷோபனாவுக்கும்,அவரது கணவர் பன்னீர்செல்வத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஷோபானா வீட்டுக்கு வந்து பார்த்த போது,வீட்டின் பீரோவில் இருந்த 14 பவுன் நகை,ரூ. 24 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் அரியலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.