புயல் பாதிப்புக்கு உடனடி நிவாரணம் தேவை

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாநில கலை இலக்கியப் பிரிவு சார்பில் பேச்சாளர்கள் தேர்வு மற்றும் பயிற்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில கலை இலக்கியப் பிரிவு தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன், பேச்சாளர்கள் அணலை ராஜேந்திரன்,மோகன்தாஸ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் களப்பணியாற்றுவது, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,விவசாயிகளுக்கும் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com