அரியலூர் அருகே சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாத்தம்பாடி ஊராட்சிக்குள்பட்ட முட்டுவாஞ்சேரி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  முட்டுவாஞ்சேரியிலிருந்து தூத்தூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்து வரும் நிலையில், அண்மையில் பெய்த மழையால் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. 
மழைக்கு முன்னரே சாலையைச் சீரமைக்கக் கோரி போராட்டம் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், சாலையைச் சீரமைக்கக் கோரி  முட்டுவாஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே இக்கிராம பொதுமக்கள்  பேருந்துகளை மறித்து புதன்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புசெழியன் மற்றும் உடையார்பாளையம் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com