கோயில்களில் விஜயதசமி சிறப்பு வழிபாடு

விஜயதசமியை முன்னிட்டு அரியலூர் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விஜயதசமியை முன்னிட்டு அரியலூர் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விஜயதசமி நாளில் கையில் எடுக்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. இதை முன்னிட்டு கல்லங்குறிச்சி கலியுகவரதராச பெருமாள் கோயில், அரியலூர் ஆலந்துறையார் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல திருமானூர், கீழப்பழுவூர்,செந்துறை,ஜயங்கொண்டம் பெருமாள், சிவன் கோயில்களிலும்  வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும் பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட உள்ள குழந்தைகள் தங்களது பெற்றோர் உதவியுடன் நெல் மணிகளிலும், சிலேட்டுகளிலும் விரல்களால் அ... ஆ... எழுதி "வித்யாரம்பம்" எனும் கல்வித் தொடக்கத்தை செய்தனர். அதைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கல்வி வளம் சிறக்க ஹயக்ரீவ பெருமானை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கோயில்களில் வழிபாட்டை முடித்த பெற்றோர் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com