விக்கிரமங்கலம் அருகே மதுபானம் விற்றவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாமிதுரை தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முட்டுவாஞ்சேரி வடக்கு தெருவைச் சேர்ந்த தேவேந்திரன்(48) தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார்,மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.