தா.பழூர் அருகே மனைவியைத் தாக்கிய கணவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
தா.பழூர் அருகே அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம்(35). இவரது மனைவி பரமேஸ்வரி(29). குடும்பப் பிரச்னை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் விக்ரம் தனது மனைவி பரமேஸ்வரியை ஊதாங்குழாலால் தலையில் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த அவர் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விக்ரமை கைது செய்தனர்.