முகிலனை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

300-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளால் பத்து தினங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்


300-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளால் பத்து தினங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலனை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே சமூக நலச் செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக முகிலனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்துக்கு சமூக நலச் செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி த. இளவரசன் தலைமை வகித்தார். மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com