தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம்

அரியலூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் பொய்யாமொழி, மத்திய மண்டல செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாநில பொதுச்செயலாளர் மோகனரங்கன் சங்க செயலறிக்கையையும், மாநில பொருளாளர் அழகிரிசாமி சங்க நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர். முன்னாள் மாநில தலைவர் துரை.ராசமாணிக்கம் வழிகாட்டுதல் உரையாற்றினார். 
மாநில அமைப்பு செயலாளர் அழகர்சாமி, மாநில துணைத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட செயலாளர் தியாகராஜன் வரவேற்றார். முடிவில், மாவட்ட பொருளாளர் நந்தகுமார் நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com