அரியலூரில் மின் பணியாளர்கள் சங்கப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மின்பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இந்திய கட்டடத் தொழிலாளர்கள் சம்மேளன மாவட்டப் பொருளாளர் ரகுநாதன், மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர் நலவாரியத்தின் நலத்திட்டங்கள் குறித்து தெரிவித்தனர். கூட்டத்தில், மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.