அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.