பெரம்பலூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட 7 பேரை பெரம்பலூர் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (35), அதே கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிபிரபாகரன் (40). இந்நிலையில், நீதிபிரபாகரனிடம் கள்ள மது வாங்க கடந்த 18 ஆம் தேதி சுரேஷ் சென்றபோது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நீதிபிரபாகரன், அவரது ஆதரவாளர்களான கண்ணதாசன், ராமச்சந்திரன் ஆகியோர் சுரேசை தாக்கி, அவரது உறவினர்கள் அன்பரசு (39), பழனியம்மாள் (45) ஆகியோரையும் தாக்கினர்.
தொடர்ந்து, கண்ணதாசனின் ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் சுரேஷ் தரப்பைத் சேர்ந்த 20 பேரின் வீடுகளை சூறையாடி மோட்டார் சைக்கிள்களை அடித்து சேதப்படுத்தினர்.
இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து அண்ணாமலை மகன் பாரதி (38), சுப்ரமணி மகன் சுரேஷ்குமார் (23), நாகமணி மகன் நக்கீரன் (23), சிங்காரவேல் மகன் மணிகண்டன் (29), பன்னீர்செல்வம் மகன் ராமநாதன் (32), கொல்லிமலை மகன் ரகு (19), குலோத்துங்கன் மகன் செல்லசாமி (41) உள்ளிட்ட 7 பேரை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.