அரியலூர்

அரியலூர் தூய லூர்து அன்னை தேர் பவனி

DIN

அரியலூர் நகரில் உள்ள தூய லூர்து அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவின் பெரிய அலங்காரத் தேர்பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தேர் பவனி  ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. குடந்தை மறை மாவட்ட ஆயர் ஏ.அமிர்தசாமி, புனிதம் செய்து தேர் பவனியைத் தொடங்கி வைத்தார்.
புனித லூர்து அன்னை பெரிய தேரில் எழுந்தருளி, 
முக்கிய வீதிகளில் வலம் வந்து, பின்னர் பேராலய முகப்பை அடைந்தது. தேர் பவனியைக் காண திரளான பொதுமக்கள் வந்திருந்தனர். திங்கள்கிழமை (பிப்.11) மாலை சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT