ஈச்சங்காடு பகுதியில் பிப்ரவரி 11 மின் தடை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை (பிப்.11) நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆர்.எஸ்.மாத்தூர், அசாவீரன்குடிக்காடு, இருங்களாகுறிச்சி, மாறாக்குறிச்சி, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, முள்ளுக்குறிச்சி, துளார், கொடுக்கூர், குவாகம், இடையக்குறிச்சி, வல்லம், தாமரைப்பூண்டி, மணக்குடையான், புதுப்பாளையம், ஆலத்தியூர், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, தளவாய், சிலுப்பனூர், செங்கமேடு, சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com