அரியலூர் கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
பயிற்சியை கூட்டுறவுத்துறை தணிக்கைத்துறை இணை இயக்குநர் பாலசுப்ரமணியன் தொடக்கி வைத்து,அலுவலர்கள் எவ்வாறு பதிவேடுகளை பராமரிப்பது, கணக்குகளை எவ்வாறு தணிக்கை செய்து குறித்து பேசினார்.
ஓய்வுப் பெற்ற தணிக்கைத் துறை அலுவலர் ராஜேந்திரகுமார் மற்றும் தணிக்கையாளர்கள் கலந்து கொண்டு அலுவலர்களுக்கு பயிற்சியளித்தனர். பிப்.15 இப்பயிற்சி நிறைவு பெறுகிறது.