பிப்.17-இல் உடையார்பாளையம்  அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலுள்ள  பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலுள்ள  பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது.
உடையார்பாளையத்தில் திருச்சி - சிதம்பரம் சாலையில் உள்ள இக்கோயிலில் இந்நிலையில் திருப்பணிகள் முடிந்த நிலையில் கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு பூஜைகள் தொடங்குகிறது. 
தொடர்ந்து தனபூஜை, லட்சுமி பூஜை, வாஸ்துசாந்தி, யாகசால பூஜைகள் நடக்க உள்ளது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம்  பிப்.17 காலை 9 மணிக்கு  நடைபெறுகிறது. 
ஏற்பாடுகளை உடையார்பாளையத்தை சேர்ந்த மகாலெட்சுமி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சோமசுந்தரம், குப்புசாமி ஆகியோரின் குடும்பத்தினர் செய்கின்றனர். திருச்சி, சிதம்பரம்,ஜயங்கொண்டம், பெரம்பலூர்,கும்பகோணம் உள்ளிட்ட பகுதியில் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com