அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர் காவல் உதவி ஆய்வாளர் மேனகா தலைமையிலான போலீஸார் சின்னபட்டாக்காடு கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து, டிராக்டரை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேசுவைக் கைது செய்தனர்.