நமது ராணுவத்தினர் தீவிரவாதிகளை வேரறுப்பார்கள் என்றார் பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா.
அரியலூர் மாவட்டம், கார்குடியில் சிவச்சந்திரன் உடலுக்கு சனிக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தியபின்னர் அவர் அளித்த பேட்டி:
ஜெய்ஷ்-ஏ முகமது தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு இதுபோன்ற தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த தாக்குதல்கள் நடத்திய தீவிரவாதிகளுக்கு அதற்கான விலையை நமது ராணுவத்தினர் கொடுப்பார்கள்.
அதற்கு முழு சுதந்திரமும் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கண்டிப்பாக நமது ராணுவத்தினர் தீவிரவாதிகளை வேரறுப்பார்கள் என்றார் அவர்.