அரியலூர்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

DIN

அரியலூர் அருகேயுள்ள எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு-2, நிர்மலா ஆர்.சி நடுநிலைப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி  புதன்கிழமை நடைபெற்றது. 
அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு-2 அலுவலர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற பேரணியை மதுக்குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார். நிர்மலா ஆர்.சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை நம்பிக்கைமேரி, ஆசிரியர்கள் ஜெரால்டு, ஜான்மார்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது நிர்மலா ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் தொடங்கி அண்ணாநகர் மற்றும் முக்கிய வீதியின் வழியாகச் சென்று எருத்துக்காரன் ஊராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.பேரணியில் கலந்து கொண்ட மேற்கண்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள், பிளாஸ்டிக் தீமைகள், அதைப் பயன்படுத்த வேண்டாம்  என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச்  சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT