அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே கோஷ்டி மோதலில் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகு (28). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (39) என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் கோஷ்டி மோதலாக மாறியது. இந்தத் தகராறில், தியாகு தரப்பில் 5 பேர் மீதும், சரவணன் தரப்பினர் 5 பேர் மீதும் ஆக மொத்தம் 10 பேர் மீதும் ஜயங்கொண்டம் போலீஸார் வழக்கு பதிந்து தியாகுவைக் கைது செய்தனர். மற்றவர்களைத் தேடிவருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமலிருக்க வாரியங்காவல் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.