அரியலூர் வட்டம், மேலப்பழூர், உடையார்பாளையம் வட்டம் வங்குடி, செந்துறை வட்டம் பிலாக்குறிச்சி, ஆண்டிமடம் வட்டம் பெரியகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சனிக்கிழமை (19 ஆம் தேதி) காலை 10 மணிக்கு ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
வட்ட வழங்க அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்துப் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.