ஊர்க் காவல் படை வீரரை தாக்க முயன்ற 2 பேர் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஊர்காவல் படை வீரரைத் தாக்க முயன்ற 2 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஊர்காவல் படை வீரரைத் தாக்க முயன்ற 2 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் மகன் கதிர்வேல் (26). ஊர்க்காவல் படை வீரர். வெள்ளிக்கிழமை இவர் உடையார்பாளையத்தை அடுத்த  துளாரங்குறிச்சி சாலையில் பைக்கில் சென்றபோது பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(26), விஜயகுமாரை (24) வீட்டுக்கு செல்லுமாறு  கூறினார். 
இதனால் ஆத்திரமடைந்த இருவரும்  கதிர்வேலை தகாதவார்த்தையால் திட்டி தாக்க முயன்றனர். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து  2 பேரையும் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com