அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஊர்காவல் படை வீரரைத் தாக்க முயன்ற 2 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் மகன் கதிர்வேல் (26). ஊர்க்காவல் படை வீரர். வெள்ளிக்கிழமை இவர் உடையார்பாளையத்தை அடுத்த துளாரங்குறிச்சி சாலையில் பைக்கில் சென்றபோது பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(26), விஜயகுமாரை (24) வீட்டுக்கு செல்லுமாறு கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கதிர்வேலை தகாதவார்த்தையால் திட்டி தாக்க முயன்றனர். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.