உடையார்பாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம்


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதி செயலர் இலக்கியதாசன் தலைமை வகித்தார்.மாவட்டச் செயலர் செல்வநம்பி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கதிர்வளவன், மாநில அமைப்புச் செயலர் இளமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், மாநில பொதுச் செயலர் துரைரவிக்குமார் கலந்து கொண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு கட்சியினர் அனைவரும் பாடுபட வேண்டும் எனத் தெரிவித்தார். 
அக்கட்சி மாநில தேர்தல் பணிக்குழு செயலர் குணவழகன், மண்டல செயலர் திருமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். 
கட்சியின் உடையார்பாளையம் நகர செயலர் ஜெயக்குமார் வரவேற்றார். ஜயங்கொண்டம் தொகுதி துணைச் செயலர் கருப்பையன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com