வாழ்வியலுக்குத் தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர் என்றார் மீனாட்சி ராமசாமி கல்லூரி தாளாளர் எம்.ஆர். ரகுநாதன்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, பேராசிரியர்கள் பாரதிராஜா, அகிலா, இளையராஜா, கணேஷ், கலைவாணி, பானுப்பிரியா, ஆஷா, துரைராஜ், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கிற்கு கல்லூரி இயக்குநர் த.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லூரி பேராசிரியை ப.கலைவாணி வரவேற்றார். பேராசிரியை ஆஷா நன்றி கூறினார்.