இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்து விபத்து : மேலும் ஒருவர் சாவு

ஜயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். 


ஜயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். 
ஜயங்கொண்டம் அருகேயுள்ள மருதூர் வடக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சுப்பிரமணியன் (28), மகேந்திரன் மகன் சக்திவேல் (20). கடந்த 7 ஆம் தேதி இவர்கள் இருவரும் ஒரே  இருசக்கர வாகனத்தில், ஜயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது நண்பர் விக்னேஷைப் பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். சக்திவேல் வாகனத்தை ஓட்டிசென்றார். இலையூர் பாலம் அருகே சென்றபோது, நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவ்வழியே சென்றவர்கள் அவர்களை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
ஆனால் வழியிலேயே சக்திவேல் உயிரிழந்தார். இந்நிலையில், ஜயங்கொண்டம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இது ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com