அரியலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக வ.சி. கோமதி சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஏற்கெனவே இச்சங்கத்தில் இணை பதிவாளாரக இருந்த பழனிசாமி பதவி உயர்வுடன், பணி இடம் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வந்த வ.சி.கோமதி பணி மாறுதல் பெற்று சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.