அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பைக் விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருமானூர் அருகேயுள்ள கோவில்எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் மரியதாஸ்(46). கட்டடத் தொழிலாளி. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது மனைவி ரேவதியுடன்(38) இரு சக்கர வாகனத்தில் அன்னிமங்கலம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரியதாஸ் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து திருமானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.