மேலவரப்பன்குறிச்சியில் மகா சண்டி ஹோமம்

அரியலூர் மாவட்டம் மேலவரப்பன்குறிச்சி கிராமத்தில், உலக நன்மைக்காக ஏகவுரியம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் மேலவரப்பன்குறிச்சி கிராமத்தில், உலக நன்மைக்காக ஏகவுரியம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் விளாம்பழம், கொப்பரை தேங்காய், இலுப்பை பூ,  நார்த்தம்பழம், பூசணிக்காய், கரும்பு, மாதுளம் பழம், வில்வபழம், வாழைப்பழம், பட்டுப்புடவை, தங்கக்காசு உள்ளிட்ட ஹோம பொருள்களை கொண்டு மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.
இதனால் பலமடங்கு விவசாயப் பொருள்கள் உற்பத்தியாகி நாட்டில் பஞ்சம், பசி நீங்கும் என ஐதீகம். தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிகளுக்கு கலச அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com