100 % வாக்குப்பதிவு: பள்ளி மாணவர்களுக்கு உறுதிமொழி கையெழுத்துப் படிவம்

மக்களவைத் தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவு ஏற்படும் வகையில், மாவட்டத்திலுள்ள 780 பள்ளிகளில்

மக்களவைத் தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவு ஏற்படும் வகையில், மாவட்டத்திலுள்ள 780 பள்ளிகளில் பயிலும் 1.30லட்சம்  மாணவ,மாணவிகளின் பெற்றோர்களிடம் உறுதிமொழி கையெழுத்து படிவம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இப்படிவம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு, அதில் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்போம் என உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு வாங்கி வருமாறு அறிவுறுத்தப்பட்டது. தாமரைக்குளம்  வித்யாமந்திர் பள்ளியில்நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன்,பள்ளி மாணவ,மாணவிகளிடம் உறுதி மொழி படிவத்தை வழங்கினார்.
அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ், பள்ளித்துணை ஆய்வாளர் பழனிச்சாமி, பள்ளி துணை முதல்வர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com