பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அரியலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அரியலூரில் நடைபெற்ற இந்த பணி புறக்கணிப்புக்கு வழக்குரைஞர் சங்கச் செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஜயங்கொண்டத்திலும் வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.