ஜயங்கொண்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்

வரும் மக்களவைத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கலை

வரும் மக்களவைத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
வரும் மக்களவை தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்காளர் பதிவேட்டில் தங்களது பெயரை சரிபார்க்க வேண்டும், ஜனநாயகக் கடமையை நிலைநாட்ட வேண்டும், எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்டவை குறித்த தேர்தல், வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் மீனா, வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, உதவியாளர் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com