உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு கூட்டம் ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டத் தலைவர் கோ. சிவசிதம்பரம் தலைமை வகித்தார். பி. ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். செயலர் ராமமூர்த்தி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், பொருளாளர் சுந்தரேசன் வரவு செலவு கணக்கு வாசித்தார். அருமைநாதன், கி.பாஷ்யம், கோவிந்தராசன், லூர்து, பி.என்.கலியபெருமாள் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள கருணை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வரும் மக்களவை தேர்தலில் பணம் வாங்காமல் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். விருத்தாசலம் ஜயங்கொண்டம் வழியாக கும்பகோணம் ரயில்பாதை அமைக்க உறுதியளிக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் ராமசாமி வரவேற்றார். பூராசாமி நன்றி கூறினார்.