அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே மாயமான பெண்ணைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழமலை (39). இவருக்கும் இவரது மனைவி ரதிதேவி (38) என்பவருக்கும் திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 16 ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு வெளியே சென்ற ரதிதேவி வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் ரதிதேவி கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் பழமலை புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.