அரியலூர்

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் தேனூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அழகிரி (32). வியாழக்கிழமை இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சாப்பாட்டில் கல் இருந்ததாகக் கூறி தனது தாயை திட்டிக் கொண்டிருந்தாராம்.
அப்போதுஅங்கு வந்த  அவரது உறவினர் சபாபதி (58),  மல்லிகா (49) ஆகியோர் தங்களைத்தான் திட்டுவதாகக் கருதி,  அழகிரியை காலில் அரிவாளால் வெட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த அழகிரி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் போலீஸார் வழக்குப்பதிந்து, சபாபதி, மல்லிகாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT