மக்களவைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், தங்களது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க வேண்டும். இந்த அட்டை இல்லாதவர்கள்கடவுசீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி , அஞ்சலகக் கணக்குப் புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு) தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப்பதிவாளாரால் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியம் ஆவணம், ஆதார் அட்டை உள்பட 11 ஆவணங்களில் ஒன்றை அடையாள அட்டையாக பயன்படுத்தி வாக்களிக்கலாம்.