அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருமானூர் அருகேயுள்ள குலமாணிக்கம்,கீழத்தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (52). விவசாய கூலித்தொழிலாளி. வெள்ளிக்கிழமை நள்ளிரவு குலமாணிக்கத்தில் இருந்து இலந்தைக் கூடம் பிரிவு பாதையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இவர், மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரான்சிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெங்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com