அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வடுகம்பள்ளி பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கிடப்பதாக அப்பகுதியினர் நாகம்பள்ளி கிராமநிர்வாக அலுவலர் சுகுணாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக விஏஓ சுகுணா அரவக்குறிச்சி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.