கரூர்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.58.85 லட்சம் மோசடி: ஒருவர் கைது

DIN

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.58.85 லட்சம் மோசடிசெய்தவரைப் போலீஸார் கைது செய்தனர். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர். 
   கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(46). கரூர் வடகரை பெரியதிருமங்கலம் கோடாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.நல்லசுப்ரமணி(54). 
இருவரும் குடும்ப நண்பர்கள். இந்நிலையில் கடந்த 2015-இல் நல்லசுப்ரமணி, அவரது மனைவி சரஸ்வதி (47),  மகள் பிரியங்கா(28) மற்றும்  தேனி மாவட்டம் தந்திநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணன்(46) ஆகியோர் தங்களுக்கு அரசியல்வாதிகளிடம் பழக்கம் உள்ளதால் உங்களது தங்கை மகன், மாமா மகன் ஆகியோருக்கு அரசு வேலை வாங்கித் தருகிறோம்  எனக்கூறி ராதாகிருஷ்ணனை சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வேலை உறுதியாகிவிட்டது. அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு ரூ. 4.75 லட்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறி ரூ.4.75 லட்சம் பணத்தை ராதாகிருஷ்ணனிடம் மேற்குறிப்பிட்ட 4 பேரும் வாங்கிக்கொண்டு பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். நீண்ட நாட்களாகியும் ராதாகிருஷ்ணனின் உறவினர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து, ராதாகிருஷ்ணன் பணத்தைக் கேட்டபோது, நல்லசுப்ரமணியன் உள்ளிட்ட 4 பேரும் இழுத்தடித்து வந்துள்ளனர். 
இந்நிலையில் கரூர் சேமங்கி அடுத்த செட்டித்தோட்டத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரிடம் ரூ.4.70 லட்சம், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் ரூ.40.90 லட்சம், தம்மங்காளிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரிடம் ரூ.4.50 லட்சம், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த குள்ளமுடையனூரைச் சேர்ந்த ஞானவேல் என்பவரிடம் ரூ.4 லட்சம் என மோசடி செய்தது ராதாகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை புகார் செய்தார். புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் அம்சவேணி வழக்குப்பதிந்து நல்லசுப்ரமணியை கைது செய்தார். மேலும் தலைமறைவான சரஸ்வதி, பிரியங்கா, சரவணன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT