ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு விருது

கரூர் திருக்குறள் அறக்கட்டளை சார்பில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் சா.சதாசிவத்தின் மருத்துவ சேவையை

கரூர் திருக்குறள் அறக்கட்டளை சார்பில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் சா.சதாசிவத்தின் மருத்துவ சேவையை பாராட்டி அவருக்கு மருத்துவ மாமணி என்ற விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
கரூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் சா.சதாசிவம். இவரது  மருத்துவ சேவையைப் பாராட்டி கரூர் திருக்குறள் அறக்கட்டளை சார்பில் அவருக்கு மருத்துவ மாமணி என்ற விருது வழங்கும் விழா கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவிற்கு, கரூர் பிரேம் டெக்ஸ் வி.வீரப்பன் முன்னிலை வகித்தார்.  விழாவில் மருத்துவர் சா.சதாசிவத்திற்கு மருத்துவ மாமணி என்ற விருதை கரூர் அமராவதி மருத்துவமனை மருத்துவர் ந. வேலுசாமி வழங்கினார். விழாவில், கரூர் வள்ளுவர் மேலாண்மை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் க. செங்குட்டுவன், கரூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை.பழநியப்பன், கவிஞர் கருவை வேணு மற்றும் தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com