சட்ட விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகம்

நெரூர் பகுதியில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்து துண்டுப்பிரசுரத்தை திங்கள்கிழமை சட்டப் பணிகள் ஆணைக்குழுவினர்


நெரூர் பகுதியில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்து துண்டுப்பிரசுரத்தை திங்கள்கிழமை சட்டப் பணிகள் ஆணைக்குழுவினர் வழங்கினர்.
தேசிய சட்டப் பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர் அடுத்த நெரூர், பஞ்சமாதேவி, அரங்கநாதன்பேட்டை, சோமூர் ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான ஆர். தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டுப்பிரசுரங்களை வழங்கினார். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு சட்டம் சார்ந்த நீதி கிடைக்க புகார்களை சமூக ஆர்வலர்கள் உதவியுடன் நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற உறுப்பினர் கே.கே.சொக்கலிங்கம், சமூக ஆர்வலர்கள் சங்கீதா, சுதா, வித்யா, வெண்ணிலா, சத்தியசித்ரா, கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com