டேங்கர் லாரியில் டீசல் திருடிய ஓட்டுநர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார்(50) என்பவர் டேங்கர் லாரி போக்குவரத்து நிறுவனம் நடத்தி வந்தார். இவரது லாரிகளில் ஓட்டுநராக மதுரையைச் சேர்ந்த சுந்தர்(41), தர்மபாண்டி(37) ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரூர் ஆத்தூரில் உள்ள பாரத் பெட்ரோலியத்துக்குச் சொந்தமான டீசல் சேமிப்புக் கிடங்கில் டீசல் நிரப்பிக் கொண்டு, திருச்சி செல்லும் வழியில் கரூர் முத்துசோழிபாளையத்தில் லாரியில் இருந்து 20 லிட்டர் டீசலை திருடி விற்றார்களாம். இதுதொடர்பாக விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் கரூர் பசுபதிபாளையம் போலீஸார் சுந்தர், தர்மபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.