கரூர்

டேங்கர் லாரியில் டீசல் திருடிய ஓட்டுநர்கள் 2 பேர் கைது

DIN


டேங்கர் லாரியில் டீசல் திருடிய ஓட்டுநர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார்(50) என்பவர் டேங்கர் லாரி போக்குவரத்து நிறுவனம் நடத்தி வந்தார். இவரது லாரிகளில் ஓட்டுநராக மதுரையைச் சேர்ந்த சுந்தர்(41), தர்மபாண்டி(37) ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரூர் ஆத்தூரில் உள்ள பாரத் பெட்ரோலியத்துக்குச் சொந்தமான டீசல் சேமிப்புக் கிடங்கில் டீசல் நிரப்பிக் கொண்டு, திருச்சி செல்லும் வழியில் கரூர் முத்துசோழிபாளையத்தில் லாரியில் இருந்து 20 லிட்டர் டீசலை திருடி விற்றார்களாம். இதுதொடர்பாக விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் கரூர் பசுபதிபாளையம் போலீஸார் சுந்தர், தர்மபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT