குளித்தலையில் வாகனம் மோதி முதியவர் இறந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிறுத்தம் எதிரே கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்ற 50 வயது மதிக்கக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரைஅக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.